×

மோடியை சித்தரித்து வைத்த பேனரால் பரபரப்பு

 

கோவை, மார்ச் 6: கோவை கணபதி மாநகர் பகுதியில் பிரதமர் மோடியை தவறாக சித்தரித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாஜவினர் 50க்கும் மேற்பட்டோர் காந்தி மாநகர் பகுதியில் கூடினர். பேனரை அப்புறப்படுத்த வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் பேனரை அகற்றினர்.

பின்னர் பாஜவினரிடம் கலைந்து செல்ல வேண்டும் என சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் அங்கு 100க்கும் மேற்பட்ட பாஜ கட்சியினர் கூடிவிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த பாஜ கட்சியினர் அனைவரையும் ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் பேசி பின்பு அனைவரையும் விடுவித்தனர்.

The post மோடியை சித்தரித்து வைத்த பேனரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Coimbatore ,Ganapati Nagar ,BJP ,Gandhi Nagar ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...